Saturday, September 8, 2012

இறுதி மகிழ்ச்சி

இறுதி மகிழ்ச்சி

வதைபட்டு வதைபட்டு
வாடிய மலர்
செடி நின்று உதிர்ந்து
மிதிபட்டு மிதிபட்டு
கருகிட!!
 மழைத்துளி
இதழ் நனைந்து
மலர செய்திட்டது
சில நொடிகள்



எ ங்கும் ஒரே  கனவு
ஒரே  துன்பம்
ஒரே  வாழ்கையென
எப்போதோ புரியும் போது!
கரைகின்றது வாழ்கை
காப்பாற்ற முடியாமல்!!!
தொலைதூரத்து!
 கோடிக கோடி கணவுகளாய்!!

People come into your life for a reason

Monday, September 3, 2012

Anatomic therapy in Tamil by Healer Baskar , rare , must for all part(2...

Realised At Last

I went away to the woods bcoz
I wished to live deliberately,
to face the front only the essential facts of life,

and see if i could not learn

மாயவனே!!

மாயவனே!!
நீ என் இயத்தில்
எப்படி வந்தாயென
எனக்கு தெரியாது
ஆனால் இருக்கின்றாய்

என் கனவில் எப்படி
வந்தாயென தெரியாது
ஆனால் நித்தமும்
கனவில் வருகின்றாய்

நான் தடுமாற! நீ
ஏன் கரம் தந்தாய்
எனத் தெரியாது
ஆனால் கரம் தந்து
காக்கின்றாய்

தவித்த போதெல்லாம்
தாயாய் ஏன் மாறினாய்
எனத்தெரியாது
ஆனால் தவிக்கும் போது
தாய் மடியானாய்

என்னை நீ
சோதித்து சோதித்து
எதைத் தேடினாய்
எனத்தெரியாது
ஆனால் என்னை
சோதிக்கின்றாய்

நான் ராதையா பேதையா
மீராவா எனத்தெரியாது
ஆனாலும் உன்னோடு
நான் இணையாய் இருக்கக்
கண்டேன்...................... 







ஏன் மறந்தாய்




ஏன்  மறந்தாய் 



வாழ்கையாய் நான் மாற
சோகங்களாய் நீயும்
வந்தாய்
மெளனங்களாய் நான்
மாற! மொழியாய் நீயும்
வந்தாய்
கவியாய் நான் மாற
கருவாய் நீயும் வந்து
இருளுக்குள் நானிருக்க
ஒளியாகி !இன்று
ஒளியாய் நான் மாற
மேகத்திற்குள் ஏன்
மறைந்தாய்.....