Monday, September 3, 2012

மாயவனே!!

மாயவனே!!
நீ என் இயத்தில்
எப்படி வந்தாயென
எனக்கு தெரியாது
ஆனால் இருக்கின்றாய்

என் கனவில் எப்படி
வந்தாயென தெரியாது
ஆனால் நித்தமும்
கனவில் வருகின்றாய்

நான் தடுமாற! நீ
ஏன் கரம் தந்தாய்
எனத் தெரியாது
ஆனால் கரம் தந்து
காக்கின்றாய்

தவித்த போதெல்லாம்
தாயாய் ஏன் மாறினாய்
எனத்தெரியாது
ஆனால் தவிக்கும் போது
தாய் மடியானாய்

என்னை நீ
சோதித்து சோதித்து
எதைத் தேடினாய்
எனத்தெரியாது
ஆனால் என்னை
சோதிக்கின்றாய்

நான் ராதையா பேதையா
மீராவா எனத்தெரியாது
ஆனாலும் உன்னோடு
நான் இணையாய் இருக்கக்
கண்டேன்...................... 







No comments:

Post a Comment